கனடாவில் காட்டுத்தீ சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் கைது!

கனடாவில் காட்டுத் தீ சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கனடாவின் வதன’கூவாரின் நனய்மியோ பகுதியில் சில இடங்களில் ஏற்பட்ட தீ விபத்துக்களுடன் இந்த நபருக்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நனய்மியோவின் நோர்த்பீல்ட் வீதியில் தீ விபத்துச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

தீ விபத்தினை ஏற்படுத்திய நபர் குறித்து பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதன் அடிப்படையில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த தீ விபத்துச் சம்பவத்தினால் எவருக்கும் காயங்களோ அல்லது உயிர்ச் சேதங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கடுமையான வெப்பநிலை மற்றும் பலத்த காற்றுடனான காலநிலையினால் காட்டுத் தீ சம்பவங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor