வவுனியாவில் இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக தீக்குளிக்க முயன்ற இரண்டு பிள்ளைகளின் தாய்

வவுனியாவில் இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக இரண்டு பிள்ளைகளின் தாயார் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா ஏ9 வீதியில் இன்று (05) காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு அவ் இரு பிள்ளைகளின் தாயார் வவுனியா பொலிஸாரினால் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் வரக்காபொல பகுதியில் வசித்து வரும் 34 வயதுடைய குறித்த பெண்ணிற்கு இரண்டு பிள்ளைகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இவர்களின் குடும்பத்தினுள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரண்டு பிள்ளைகளையும் தந்தை அழைத்துச்சென்று இருவரும் சில மாதங்களாக பிரிந்து வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ வீரருடன் தொடர்பு
இந்நிலையில் இரண்டு பிள்ளைகளின் தாயாருக்கும் இராணுவ தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் குடும்பஸ்தரான இராணுவ வீரருக்குமிடையே தொடர்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

எனினும் சில வாரங்களாக இராணுவ வீரருடைய தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் விரக்தியடைந்த குடும்ப பெண் அவரை தேடி தலைமை அலுவலகத்திற்கு சென்ற போதிலும் இராணுவ வீரரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அப் பெண் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக தீக்குளிக்க முற்பட்ட சமயத்தில் வவுனியா பொலிஸாரினால் அவர் காப்பாற்றப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor