மக்காவுக்கான புனித ஹஜ் யாத்திரையை மேற்கொண்டிருந்த இரு இலங்கையர்கள் உயிரிழப்பு!

மக்காவுக்கான புனித ஹஜ் யாத்திரையை மேற்கொண்டிருந்த இரு இலங்கையர்கள் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

கொலன்னாவ பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மாரடைப்பு காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேநேரம் கொழும்பு 14 ஐ சேர்ந்த ஆண் ஒருவர் மதீனா நகரில் இடம்பெற்ற விபத்தொன்றில் உயிரிழந்ததாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor