முறிகண்டியிலிருந்து கடத்தப்பட்ட முதிரை குற்றிகள் பறிமுதல்!

முறிகண்டியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்தப்பட்ட முதிரை மரக் குற்றிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

டிப்பர் வாகனம் ஒன்றில் சூட்சுமமாக மறைத்து கொண்டு வரப்பட்ட பெறுமதி வாய்ந்த முதிரை மரக் குற்றிகள் பளை பொலிஸாரால் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டன.

முறிகண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனத்தில் முதிரை மரக் குற்றிகள் கடத்தப்படுவதாக பளை பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

குறித்த தகவலிற்கமைவாக பளை நகரில் சோதனை மேற்கொண்ட பொலிஸார் குறித்த டிப்பர் வாகனத்திலிருந்து முதிரை மரக் குற்றிகளை மீட்டதுடன் வாகனத்தை தமது
பொறுப்பின் கீழ் கொண்டு வந்ததுடன் சாரதியையும் கைது செய்தனர்.

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட 28 முதிரை மரக் குற்றிகளும் 5 இலட்சம் ரூபா பெறுமதியானது என பொலிஸார் தெரித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நிறைவுற்றதும் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்குத் தொடரப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN