யாழில் 350 பேருக்கு இன்று ஆசிரியர் நியமனம் வழங்கல்

கல்வியியற் கல்லூரிகளில் பயின்று வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு தெரிவான 350 பேருக்கான ஆசிரியர் நியமனங்கள் இன்று வழங்கப்பட்டன.

கல்வியியற் கல்லூரிகளில் பயின்று வெளியேறிய 7,500 பேருக்கு இன்று  வெள்ளிக்கிழமை ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுகின்றன.

இதில், வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக தெரிவு செய்யப்பட்ட 350 பேருக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று  வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கல்வியியற் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.

Recommended For You

About the Author: S.R.KARAN