சிவப்பணி வித்தகர் விருது வழக்கிக் கௌரவிப்பு

யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடாத்தும் வாராந்தச் சுக்கிரவாரச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் இன்று 26.05.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சமயஜோதி க.நிஜலிங்கம் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது .

ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினை தொடர்ந்து பரிபாலன சபைத் தலைவர் த.சோதிலிங்கம் அவர்கள் தமையுரை ஆற்றினார்.

ஆலயப் பிரதம குருக்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினரால் சொற்பொழிவாளர் சைவப்புலவர் செ. த. குமரன் அவர்கள் ” சிவப்பணி வித்தகர் ” விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

Recommended For You

About the Author: S.R.KARAN