வங்கியொன்றின் நிறைவேற்று தரப் பணியாளர் ஒருவருடன் மொடல் அழகி கைது!

பணக்கார வர்த்தகர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு பெண்களை விற்பனை செய்து வந்த மூவரும் , அவர்களுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட நான்கு பெண்களும் வாலான ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹொரணை, அங்குருவாதோட்டையில் கடந்த 22 ஆம் திகதி அவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

55,000 ரூபா அறவிடு
கைது செய்யப்பட்ட பெண்களில் பிரதான வர்த்தக வங்கியொன்றின் நிறைவேற்று தரப் பணியாளர் ஒருவரும் , மாடல் அழகி ஒருவரும் அடங்குவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மொரட்டுவ கொரலவெல்ல பிரதேசத்தில் வாழும் நபர் ஒருவர் இந்த விபச்சார வியாபாரத்தை நடத்தி வருவதாக வலான ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, இதனையடுத்து இரகசிய முகவர் ஒருவரை பயன்படுத்தி குறித்த நபரையும் குழுவையும் கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டுக் குழுவொன்றிற்கு தமது சேவைகள் தேவையென அழைப்பு விடுத்து வாகனத்தில் ஹொரணை அங்குருவாதொட்ட பிரதேசத்திற்கு அவர்களை வரவழைத்துள்ளனர்.

கைதான பெண்கள், ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்தும் சுமார் 55,000 ரூபா அளவில் அறவிடுவதாகவும் தெரியவந்துள்ளது. அதோடு , இந்த வியாபாரத்திற்கு ஆதரவளித்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: webeditor