கனேடிய பல்கலைகழகம் ஒன்றில் விசா மோசடி

கனேடிய பல்கலைக்கழகத்தில் கல்வி விசா – 60 கோடி ரூபாய் மோசடி செய்த ஆண் பெண் கனடாவில் உள்ள கிளிம்ப் பல்கலைக்கழகத்தில் கற்பதற்கான கல்வி விசா வழங்குவதாக கூறி இலங்கையர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

60 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த பெண்ணும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரான பெண் மற்றும் ஆணின் மோசடியில் பெருமளவான வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பத்தரமுல்லை பெலவத்தை குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு அருகில் நபர் ஒருவர் தாக்கியதாக சந்தேக நபர்களான பெண் மற்றும் ஆண் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து மோசடியாளர்களான ஆண், பெண் மற்றும் தாக்குதல் நடத்திய நபர் ஆகிய மூவரையும் தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததில், இந்த பாரிய மோசடித் தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: webeditor