இரு பாடசாலை மாணவ குழுக்களுக்கு இடையில் மோதல்!

பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள பிரபல இரு பாடசாலை மாணவர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பரவிய தாக்குதலின் காணொளிக் காட்சிகள் தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்தே மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கூரிய ஆயுதத்தால் காயப்படுத்த முயன்ற மாணவர்கள்
சம்பவத்தில் இரு மாணவர்களை கொடூரமாக தாக்கி கூரிய ஆயுதத்தால் காயப்படுத்த முயன்ற மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் தவிர அந்த இடத்தில் சண்டையிட்ட மேலும் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் கைதாக மாணவர்கள் இன்று (23) பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor