மாற்றுத் திறநாளியான மகளை தாயின் கண்முன் வன்கொடுமை செய்த பொலிசார்

தாயின் முன்னிலையில் 26 வயதுடைய மாற்றுத்திரனாளியான மகளை வன்கொடுமை செய்ய முற்பட்டதோடு அப் பெண்ணை கடுமையாக தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

அத்தோடு இக் குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்வதற்காக தேடப்பட்டுக்கொண்டிருக்கும் பொலிஸ் கான்ஸ்டபிள் வாழைத்தோட்ட பொலிஸில் இணைக்கப்பட்டு கொழும்பு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் காரியாலயத்தில் கடமையாற்றுகின்றார்.

பணிக்கு அமர்த்தப்பட்ட தாயும் யுவதியும்

இந்த கான்ஸ்டபிளின் நோய்வாய்ப்பட்ட தாயை கவனித்துக்கொள்வதற்காக அவ் யுவதியுடன் அவருடைய தாயும் இரண்டு வருடங்களாக அந்த கான்ஸ்டபிளின் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு சொந்தமான 10 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போனமை தொடர்பில் தாயையும் மகளையும் அறை​யொன்றுக்குள் அழைத்துச் சென்றுள்ளார்.

யுவதியின் முறைப்பாடு

அங்குவைத்து தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு அந்த யுவதியிடம் பொலிஸ் கான்ஸ்டபிள் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அக்கோரிக்கையை அந்த யுவதி நிராகரித்துள்ளார் என யுவதியின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் கொஸ்கம பொலிஸ் நிலையத்தில் வௌ்ளிக்கிழமை (19) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த யுவதி முறைப்பாடு செய்வதற்கு முன்னர் கொஸ்கம பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் தன்னுடைய 10 ஆயிரம் ரூபாய் காணாமல் போனது தொடர்பில் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.

துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மாற்றுத்திரனாளியான 26 வயதுடைய யுவதியை வைத்திய பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor