வெப்பமான காலநிலை குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் வெப்பமான காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் உள்ள வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் “அவதானம்” செலுத்தப்பட வேண்டிய மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பகுதிகளில் இருப்ப்வர்கள் நீரேற்றத்துடன் இருக்குமாறும் முடிந்தவரை நிழலில் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor