மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

தமிழின அழிப்பு நாளான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (18) உணர்வு பூர்வமாக தமிழ் பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மன்னாரிலும் அனுஷ்டிக்கப்பட்டது.

இன்று வியாழக்கிழமை காலை 8 மணியளவில் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பஜார் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. நிகழ்விலதமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த மத தலைவர்கள் மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Recommended For You

About the Author: webeditor