மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவளைப்பு!

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய நிலையமொன்றை சுற்றிவளைத்து அதன் முகாமையாளர் உட்பட மூன்று பெண்களை கைதுசெய்ததாக பாதுக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட முகாமையாளர் ஹங்வெல்ல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் பெரும் தொகையை செலுத்தி குறித்த நிலையத்தை வாடகைக்கு பெற்றுக்கொண்டு இந்த பெண்களை விபசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது தொடங்கொட, இதுருவ மற்றும் அகலவத்தை பிரதேசங்களைச் சேர்ந்த 23 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor