மீண்டும் இலங்கையில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது!

கதிர்காமம் – லுனுகம்வெஹேர பகுதியில் சிறு அளவிலான நில அதிர்வொன்று பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலஅதிர்வு நேற்றிரவு 10.24pm அளவில் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் 2.5 ரிக்டர் அளவில் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாகவும் பணியகம் குறிப்பிடுகின்றது.

நாட்டின் தென் பகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான நில அதிர்வுகள் பதிவிகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor