மது போதையில் 75 வயதான வயோதிப பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர்

மதுபோதையில் 75 வயதான வயோதிப பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் தலைமறைவாகியுள்ளார்.

பாதிக்கப்பட்ட வயோதிப பெண் பதுளை மாகாண பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை (09) அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை தேடும் பொலிஸார்
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய 51 வயதுடைய சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

சம்பத்துடன் தொடர்புடைய நபர் அதிக போதையில் காணப்பட்டதாக கூறியுள்ள பொலிஸார் சந்தேகநபரை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor