அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியுள்ள சுற்றறிக்கை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்பு மனுக்களை தாக்கல் செய்த அரச அதிகாரிகளை மீண்டும் பணியில் சேர்ப்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு
இதன்படி, உள்ளூராட்சி மன்ற வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த அரச பணியாளர்கள் தாங்கள் வேட்பாளராக போட்டியிடும் தொகுதியில் பணிபுரிந்தால், அதற்கு வெளியே உள்ள அரச அல்லது அரச அனுசரணை பெற்ற நிறுவனங்களுக்கு இடமாற்றம் பெற்று பணியில் இணைய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த அரச பணியாளர்கள் இன்று (9) முதல் அந்தந்த நிறுவனங்களின் தலைவர்களால் நியமிக்கப்பட்ட பணியிடங்களில் பணிக்கு செல்ல முடியுமென அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor