சிறுவர் இல்லத்தில் இருந்து இரு சிறுமிகள் தப்பி ஓட்டம்!

மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலுள்ள சிறுவர் பராமரிப்பு சீர்திருத்த நிலையம் ஒன்றில் இருந்து 14,13 வயதுடைய இரு சிறுமிகள் தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று திங்கட்கிழமை (08.05.2023) அதிகாலையில் பாராமரிப்பு நிலையத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தில் சிறுவர் திருமணம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சிறுமிகளை சீர்திருத்துவதற்காக நீதிமன்றத்தினால் சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படும்.

மேலதிக விசாரணை
இந்த நிலையில் நீதிமன்றினால் குறித்து சிறுவர் பராமரிப்புக்காக அனுப்பப்பட்ட வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியும் ஏறாவூரைச் சேர்ந்த 13 வயது சிறுமியும் பராமரிக்கப்பட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவதினமான இன்று அதிகாலை 2.30 மணியளவில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக பாராமரிப்பு நிலையத்தினர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor