இலங்கை மக்களுக்கு டிஜிட்டல் ID வழங்க இந்தியா உதவி!

அதிநவீன முறையிலான டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்க, இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது சாத்தியக்கூறு மட்டத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது.

சாகல ரத்நாயக்க – கோபால் பாக்லே சந்திப்பு
அதற்கமைவாக புதிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் எனவும் ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கு இடையில் கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor