டெங்கு ஒழிப்பு குறித்து ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

டெங்கு ஒழிப்பு பணிக்குழுவை திரட்டி, அதன் ஊடாக மேல் மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு செயற்பாட்டை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

மேல் மாகாணத்தில் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் மேல் மாகாண ஆளுநர், பிரதம செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோருக்கு இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் டெங்கு தொற்று
மேல் மாகாணத்தில் அண்மைக்காலமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் மேல் மாகாணத்தில் டெங்கு ஒழிப்பை முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor