லண்டனிற்கு சென்றார் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (04) காலை பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் நடைபெறவுள்ள மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி இவ்வாறு நாட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.

மன்னரின் முடிசூட்டு விழா
லண்டனின் பழமையான வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் 6 ஆம் திகதி நடைபெறும் முடிசூட்டு விழாவில் அரச குடும்ப உறுப்பினர்கள், உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் தனது தாயார் 2 ஆம் எலிசபெத் மகாராணியின் மரணத்திற்குப் பிறகு மன்னர் சார்ள்ஸ் அரியணை ஏறியமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor