நெடுந்தீவில் நான்கு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!

யாழ்ப்பாண மாவட்டம் – நெடுந்தீவு, 11 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இராசேந்திரம் என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தில் குடியிருப்புக்கள் அற்ற பகுதியில் மரத்தில் தொங்கிய நிலையில் இவரது சடலம் இன்றைய தினம் (21-04-2023) மீட்கப்பட்டுள்ளது.

4 பிள்ளைகளின் தந்தையான இவர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இறப்பு விசாரணைகளின் பின்னர் சடலம் குடும்பத்தினரிடம் கையளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது

Recommended For You

About the Author: webeditor