ஒரு வருடத்தின் பின் கைதான சந்தேக நபர்கள்

மருதானை பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் கடந்த வருடம் மே 9 ஆம் திகதி காவல்துறை வாகனத்தை தாக்கி உதிரிபாகங்களை அகற்றி தீ வைத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து நேற்று (19) இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

18, 31 மற்றும் 46 வயதுடைய சந்தேக நபர்கள் மாளிகாவத்தை மற்றும் கொழும்பு-12 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களென காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor