மின்சாரசபை மறுசீரமைப்பு தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி!

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான வீதி வரைபடம் மற்றும் உத்தேச காலவரையறை தொடர்பாக அனைத்து தரப்பினரையும் தெளிவுப்படுத்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜசேகர நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்கமைய, நேற்று காலை அவர் இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்க பிரதிநிதிகளுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் பொறியியலாளர்கள் மற்றும் மறுசீரமைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவிற்கு இடையே கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor