எண்ணெய் சட்டிக்குள் விழுந்த சிறுமி உயிரிழப்பு!

மராட்டிய மாநிலத்தில் உள்ள பேக்கரி ஒன்றின் சமையல் அறையில் கொதிக்கும் எண்ணெய் சட்டிக்குள் விழுந்து சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் கடந்த மாதம் 30-ம் திகதி (30-03-2023) மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் லஹம்பூர் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

அப்போது, நிலைதடுமாறி சமையல் அறையில் இருந்த கொதிக்கும் எண்ணெய் சட்டிக்குள் சிறுமி விழுந்தார்.

இதில், படுகாயமடைந்த சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுமி நேற்றைய தினம் (02-04-2023) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor