பிரான்சில் கத்தியை காட்டி மிரட்டிய நபர் சுட்டுக் கொலை!

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் கத்தியைக் காட்டி மிரட்டிய நபரை பொலிசார் சுட்டுக் கொன்றனர்.

காலையில் விமான நிலையத்தின் 2F டெர்மினலுக்கு வந்த வீடற்ற ஒரு நபர் அங்கிருந்த பாதுகாவலர்களை தொந்தரவு செய்துள்ளார்.

இதனையடுத்து அங்கு பொலிசார் வந்ததும் அந்த நபர், சத்தம் போட்டு கத்தியவாறு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

ஆனால், மீண்டும் கத்தியுடன் வந்த அந்த நபர் கத்தியைக் காட்டி மிரட்டிய நிலையில், பொலிசார் அவரை எச்சரித்துள்ளனர்.

எனினும் அந்த நபர் கத்தியுடன் பொலிசாரை நோக்கி வந்ததால், காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கியை எடுத்து சுட்டத்தில் அந்த நபர் உயிரிழந்தார் என தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor