யாழில் தவறான முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன்

யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்றைய தினம் (28-03-2023) இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலைவாணி வீதி வடலியடைப்பு பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த 29 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு தவறான முடிவை எடுத்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமை புரிந்து வரும் நிலையில் சீருடையில் இருந்த கயிற்றினை பயன்படுத்தி தூங்கிட்டதாக அறிய முடிகிறது.

இன்று அவர் இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அதனைத் தொடர்ந்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor