கின்னஸ் சாதனை படைத்த நடிகர் அக்‌ஷய் குமார்

பொலிவுட்டில் முன்னணி நடிகராக வலம்வரும் தான் அக்‌ஷய் குமார் (Akshay Kumar). இவர் தற்போது செல்பி என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்தப்படம் நாளையதினம் (24-02-2023) திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் புரொமோஷன் முழுவீச்சில் நடந்தது.

இந்த படத்தின் ஒருபகுதியாக ரசிகர்களுடன் செல்பி எடுக்கும் நிகழ்வு நடந்தது. இதில் நடிகர் அக்‌ஷய் குமார் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

அதாவது மூன்று நிமிடத்தில் 184 செல்பி எடுத்து அவர் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதற்கான சான்றும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அக்‌ஷய் குமார் கூறுகையில்,

‛‛இந்த தருணம் வரை நான் இதுவரை சாதித்த அனைத்து விடயங்களிலும், எல்லா இடங்களிலும் என் உடன் இருப்பது ரசிகர்களின் நிபந்தனையற்ற அன்பு மற்றும் ஆதரவே காரணம்.

இது அவர்களுக்கான என் சிறப்பு பரிசு. அனைவருக்கும் நன்றி. இது மிகவும் சிறப்பு வாய்ந்தது, இதை நான் என்றென்றும் நினைவில் வைத்திருப்பேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor