கடன் வாங்கி கனடா சென்ற நபருக்கு நேர்ந்த சோகம்

பஞ்சாப் மாவட்டத்தில் கடன் வாங்கி மகனை கனடாவுக்கு அனுப்பிய விவசாய குடும்பத்திற்கு தற்போது துயரமான செய்தியொன்று கிடைத்துள்ளது.

பஞ்சாப் பகுதியில் கிராமமொன்றிலுள்ள விவசாயக்குடும்பம் ஒன்றில் பிறந்தவர் குர்ஜோத் சிங் என்ற இளைஞர் கனடாவுக்கு மாணவர் விசாவில் ஜனவரி மாதம் 11ஆம் திகதி சென்றுள்ளார்.
இதன்போது சர்ரேயில் தங்கியிருந்த இவர், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.

கடன் பெற்று மகனை கனடாவுக்கு அனுப்பிய குடும்பத்தினர், தற்போது மகனுடைய உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர அரசின் உதவியை நாடியுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor