மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.!

யாழ்.வேலணை துறையூர் சர்வசக்தி அறநெறி பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்-இலங்கை(ITR)பணிப்பாளருமான யாழ்.தீவகம்,வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நிதி ஏற்பாட்டில் ரூபா பதினைந்தாயிரம் பெறுமதியான கற்றல் உபகரணங்களை பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான நிர்வாகிகளான அறக்கட்டளையின் செயலாளரும் முன்னாள் வட மாகாணசபை,யாழ். மாநகரசபை,வலிகாமம் தெற்கு பிரதேசசபை,சுன்னாகம்,உறுப்பினருமான ந.விந்தன் கனகரட்ணம்,அறக்கட்டளையின் ஆலோசகர் இ.மயில்வாகனம் ஆகியோர் இன்று வழங்கி வைத்தனர்.மேற்படி நிகழ்வில்,வேலணை துறையூர் ஐயனார் கலாமன்றம் தலைவர் கந்தையா
இராசரெத்தினம்,சர்வசக்தி அறநெறி பாடசாலையின் பொறுப்பாசிரியர், இராசரெத்தினம் பிரதீபா,ஆசிரியரான
பரமநாதன் விஷ்ணுகா,
பெற்றோர்கள்,மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு நிகழ்வினைச் சிறப்பித்தனர்.

Recommended For You

About the Author: webeditor