பூமணி அம்மா அறக்கட்டளையால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவரான யாழ்.தீவகம் சரவணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நெறிப்படுத்தலில், பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான நிர்வாகிகளான அறக்கட்டளையின் செயலாளரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான ந.விந்தன் கனகரட்ணம், அறக்கட்டளையின் கல்விப்பிரிவு பொறுப்பாளர் அதிபர் க.சசிதரன், ஆகியோரால் 20ஃ12ஃ2022 அன்று யாழ். அரியாலை பூம்புகார் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் வறிய நிலை மாணவர்களுக்கு 20 ஆயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

பாடசாலையின் பதில் அதிபரான திரு சிவசுந்தரம் சிவனொளிச்செல்வன் அவர்கள் அறக்கட்டளையின் நிர்வாகத்தினரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இவ் உதவித்திட்டம் வழங்கப்பட்டதுடன் பாடசாலையின் பதில் அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்வினைச் சிறப்பித்தனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN