யாழ். புத்தூர் ஊறணியில் நிவாரணப் பணி

ஜே/278 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள முப்பத்திரெண்டு வறிய நிலை குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக உலர் உணவு பொருட்கள் 17/12/2022 இன்று வழங்கி வைக்கப்பட்டது.

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்-இலங்கை(ITR)பணிப்பாளருமான யாழ்,தீவகம்,வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நெறிப்படுத்தலில் மேற்குறித்த பகுதிகளில் வசிக்கும் குறைந்த வருமானங்களைக் கொண்ட வறிய நிலை 32 குடும்பங்களுக்கு,குடும்பம் ஒன்றிற்கு இரண்டாயிரம் ரூபாய்ப்படி,அறுபத்தி நாண்காயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள்,பூமணி அம்மா அறக்கட்டளையின் வாழ்வாதார நிவாரண உதவிப் பணியாக,பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளரும் முன்னாள் வலிகாமம் தெற்கு பிரதேசசபை சுன்னாகம்,யாழ்.மாநகரசபை,வட மாகாணசபை உறுப்பினருமான ந.விந்தன் கனகரட்ணம்,அறக்கட்டளையின் ஆலோசகர் இ.மயில்வாகனம்,புத்தூர் ஊறணி கண்ணகை அம்மன் சனசமூக நிலைய தலைவர் நல்லான் ரவிச்சந்திரன் ஆகியோரால் குறித்த சனசமூக நிலையத்தில் வைத்து பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

Recommended For You

About the Author: S.R.KARAN