சட்டவிரோதமாக கப்பல் மூலமாக கனடா செல்ல முற்பட்டு வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலம் நாட்டை வந்தடைந்தது!

சட்டவிரோதமாக கப்பல் மூலமாக கனடா செல்ல முற்பட்டிருந்த நிலையில் படகு பழுதடைந்ததால விய்ட்நாமில் தங்க வைப்பட்டிருந்ததனர்.

நாட்டுக்கு மீளவும் திருப்பி செல்ல போவதில்லை என தெரிவித்து தற்கொலைக்கு இருவர் முயன்ற நிலையில் யாழ் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்திருந்தார்.

வியட்நாம் நாட்டில் மரணமடைந்த,சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் சற்று முன்னர் விமானம் மூலமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

பிரேத பரிசோதனை
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை இறுதிக்கிரியைகள் நாளை யாழ்ப்பாணம் சாவகச்சேரி கல்வயலில் உள்ள அவரின் வீட்டில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: webeditor