கத்திக்குத்து தாக்குதலில் தாயும் மகளும் பலி!!

கத்திக்குத்து தாக்குதல் ஒன்றில் தாயும் மகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

Vigneux-sur-Seine (Essonne) நகரில் இன்று திங்கட்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

50 வயதுடைய பெண் ஒருவரும் அவரது 14 வயது மகளும் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு மருத்துவக்குழுவினர் வந்தடையும் முன்னர் அவ்விருவரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியது குறித்த பெண்ணின் முன்னாள் கணவர் எனவும், 40 வயதுடைய குறித்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor