திருகோணமலையைச் சேர்ந்த மற்றுமோர் குடும்பம் ஒன்று இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர்

அண்மைக்காலமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை பூர்வீகமாக கொண்ட பலநூற்றுக்கணக்கானோர் படகுமூலம் சென்று இந்தியாவில் ஏதிலிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

அந்தவகையில் இன்று காலை திருகோணமலையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று படகு மூலம் இந்தியா சென்று தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் ஆகியோரே இவ்வாறு ஏதிலிகளாக சென்றுள்ளனர்.

தமிழக பொலிஸார் அவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor