இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் கன உலோகங்கள்

நாட்டில் நிலவும் சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ‘பொன்னி சம்பா’ அரிசி மாதிரிகளில் கன உலோகங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் வகையில் இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கு அண்மையில் அமைச்சரவை... Read more »

வெனிசுலாவில் கோர விபத்து: 16 பேர் பலி

வெனிசுலாவில் நெடுஞ்சாலையில் சரக்குகளை ஏற்றிச் சென்ற ட்ரக் ஒன்று பல கார்கள் மீது மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ட்ரக்கின் அதிவேகம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக... Read more »
Ad Widget

தங்க விலை அதிகரிப்பு

தங்கத்தின் விலை நேற்றுடன் (13) ஒப்பிடுகையில் இன்று (14) சிறிதளவு அதிகரித்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி இன்று 24 காரட் தங்கம் ஒரு பவுன் 187,850 ரூபாவாகும். 22 காரட் தங்கம் ஒரு பவுன் 172,200 ரூபாவாகவும், 21 காரட் தங்கம் ஒரு... Read more »

பால் பண்ணை பதிவு நடவடிக்கை ஜனவரியில் ஆரம்பம்

நாட்டில் பால் பண்ணைகளை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அனைத்து பால் பண்ணைகளையும் பதிவு செய்வதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டில், 90,592 கால்நடை பண்ணைகள் காணப்படுகின்ற போதிலும், 58,137 பண்ணைகள் மாத்திரமே கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத்... Read more »

மாவீரர் தின நினைவேந்தல் விசாரணையில் மட்டக்களப்பு ஊடகவியலாளர்

மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர் லெட்சுமணன், தேவபிரதீபன் விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். நவம்பர் 27ஆம் திகதி நடைபெற்ற மாவீரர் தின விழா தொடர்பான அறிக்கையைப் பெறுவதற்காகவே இந்த விசாரணை இடம்பெற்றது. மேலும், பயணிப்பதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் பதிவு சான்றிதழை பொலிஸ் நிலையத்திற்கு... Read more »

சந்திரிக்கா தலைமையில் புதிய அரசியல் கூட்டணி

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தலைமையில் புதிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சு.கவின் அமைச்சர்கள் இருவர் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஜனாதிபதித் ரணில் விக்ரமசிங்கவால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட... Read more »

குருநாகல் முன்னாள் மேயருக்கு கடூழியச் சிறைத்தண்டனை

குருநாகல் முன்னாள் மேயர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட 5 பிரதிவாதிகளுக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குருநாகல் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள தொல்பொருள் பெறுமதி வாய்ந்த புவனேகபா ராஜ சபை மண்டபத்துடன் கூடிய கட்டிடத்தை இடித்து அகற்றியமை தொடர்பில் இந்த... Read more »

10 மாதங்களில் 2,366 விவசாயிகள் தற்கொலை

மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து அக்டோபர் வரை 2,366 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக அம்மாநிலத்தின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் துறை அமைச்சர் அனில் பைதாஸ் பாட்டீல் சட்டப்பேரவையில் இன்று தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் வறட்சி, பசி அதிகரித்துள்ளது. இந்நிலையில்,... Read more »

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி; எலும்புக்கூடுகளின் பாலினத்தை கண்டறிய ஆய்வு

போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன்னர் தோண்டப்பட்ட புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் பாலினத்தை (ஆண், பெண்) அடையாளம்காண அடுத்த வாரம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தை அண்மித்து எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் ஜூன் மாத... Read more »

லிட்ரோ எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கப்படும்

எதிர்வரும் ஜனவரி மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு முதல் வட் எனப்படும் பெறுமதி சேர் வரியை 18 சதவீதமாக அதிகரித்ததன் பின்னர், லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை கணிசமாக உயர்வடையும் என்று நிறுவனத்தின்... Read more »