சந்திரிக்கா தலைமையில் புதிய அரசியல் கூட்டணி

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தலைமையில் புதிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சு.கவின் அமைச்சர்கள் இருவர் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதித் ரணில் விக்ரமசிங்கவால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை தோன்றினால் அவருக்கு பதிலாக மாற்று வேட்பாளர் ஒருவரை உருவாக்கும் நோக்கில் இந்த முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவுடன் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பு காரணமாக அவர்களால் அடுத்த தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பது இந்த அமைச்சர்களது நிலைப்பாடாக உள்ளதாகவும் அந்த சந்தர்ப்பத்தை தட்டிபறிப்பதன் ஊடாக தமக்கு ஆதரவான ஒருவரை பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் வேட்பாளராக களமிறக்க முடியும் எனவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், பொதுஜன பெரமுனவுடான கருத்து வேறுபாடுகள் காரணமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க இதற்கு சம்மதிக்க மாட்டார் என்றே அறிய முடிகிறது.

இதேவேளை, பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவது உறுதியென ஐ.தே.கவின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

Recommended For You

About the Author: admin