நாளை கிழக்கு மாகாணம் முழுவதும் வெள்ளைக் கொடி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனின் இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளதுடன், அதில் இலங்கையின் அரசியல் பிரமுகர்களும், வெளிநாட்டு முக்கிய அரசியல்வாதிகளும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது இறுதிக்கிரியை நடைபெறும் போது, கிழக்கின் சகல... Read more »

திருகோணமலையில் தூக்கிட்டு ஒருவர் மரணம்

திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மனையாவேளி பிரதேசத்தில் தூக்கிட்டு ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக துறைமுகப் பொலிசார் தெரிவித்தனர். இன்று (02) பிற்பகல் 4.15 மணியளவில் குறித்த நபரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளதாக குடும்பத்தார் தெரிவித்தனர். இவ்வாறு தூக்கிட்டு மரணமானவர் தமிழ் வேந்தன் (வயது 52) எனவும்... Read more »
Ad Widget

இந்து வழிபாட்டு அடையாளங்கள் காணப்படுகின்ற மலைத் தொடரை உடைப்பதற்கு முயற்சி

திருகோணமலையில், இந்து வழிபாட்டு அடையாளங்கள் காணப்படுகின்ற மலைத் தொடரை உடைப்பதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு, சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்கு இயந்திரத்துடன் உடைப்பு வேலைகளை ஆரம்பிக்க முயன்ற போது அப்பகுதி மக்கள்... Read more »

2 தமிழ் மீனவர்களை காணவில்லை: ஏன் இந்த பாராமுகம் – சுகாஷ் கேள்வி

திருகோணமலை, சல்லிக் கிராமத்தில் 2 தமிழ் மீனவர்களை 5 நாட்களாகக் காணவில்லை. சிங்கள மீனவர்கள் காணாமற்போனால் ஹெலிகொப்டரில் தேடும் அரசு, தமிழ் மீனவர்கள் என்பதால் பாராமுகமா? என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற... Read more »

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து கஞ்சி வழங்கியவர் கைது

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அப்பகுதி மக்கள் கஞ்சி வழங்கிய ஒருவர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை திருகோணமலை சம்பூர் சேனையூர்ப் பகுதியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அப்பகுதி மக்கள் கஞ்சி காய்ச்சிக்கொண்டிருந்த போது அதனை சம்பூர் பொலிஸார் தடுக்க முற்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே,... Read more »

இந்தியன் எண்ணை நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் திருகோணமலையில்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா.மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் ஒன்றிணைந்து திருகோணமலை இந்தியன் எண்ணை நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தை இன்று சனிக்கிழமை திறந்து வைத்தனர். திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதியில் சாம்பல் தீவு பாலத்திற்கு அருகாமையில்... Read more »

பாரதிபுரம் படுகொலை: பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவருக்கு மரண தண்டனை

தம்பலகாமம் – பாரதிபுரத்தில் இடம்பெற்ற ஆட்கொலைச் சம்பவத்தில் தொடர்புபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவருக்கு 26 வருடங்களின் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தம்பலகாமம் – பாரதிபுரம் கிராமத்தில் நிராயுதபாணியாகவிருந்த 08 தமிழர்கள் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்தனர். இதன்போது குறித்த பகுதியில் சட்டவிரோத ஒன்றுகூடலில்... Read more »

புதிய முயற்சியை ஆரம்பித்துள்ள திருமலை விவசாயிகள்

யான் ஓயாவின் கிளை ஆற்றை மறித்து, விவசாயம் மேற்கொள்வதற்கான முயற்சியில் திருகோணமலை, திரியாய் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், ஈடுபட்டு வருகின்றனர். திரியாய் விவசாயிகளின் பாரிய முயற்சியின் காரணமாக 1300க்கு மேற்பட்ட மண் மூடைகள் 15 அடி உயரத்திற்கு அடுக்கப்பட்டு ஆற்று நீரை வயல்களுக்கு திருப்பியுள்ளனர்.... Read more »

யாப்பு விதிகள் மீறப்பட்டதை சிறிதரன் தரப்பு ஒப்புக் கொண்டது

தமிழரசு கட்சியின் யாப்பு விதிகளை அப்பட்டமாக மீறியுள்ளதை ஏற்றுக்கொள்வதாக எதிர்த்தரப்பினர் மன்றில் தெரிவித்துள்ளனர் என்று வழக்காளிகள் சார்பில் மன்றில் வாதாடிய சட்டத்தரணிகள் “ஒருவன்” செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார். இதேவேளை வழக்காளிகளுக்கு நிவாரணம் வழங்க எதிராளிகள் இணங்குவதாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் யாப்பு விதிகளுக்கு அமைய தீர்மானங்கள்... Read more »

தாமரை பூ பறிக்க சென்ற இளைஞன் பலி..!

திருகோணமலை, பூநகர் பணிச்சங்குளத்தில் தாமரைப்பூ பறிக்கச் சென்ற இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஈச்சிலம்பற்று-பூமரத்தடிசேனை பகுதியில் வசித்து வரும் 33 வயதுடைய கனகசுந்தரம் விவேகானந்தன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பூநகர்- பனிச்சங்குளம் குளத்திற்கு இன்று (28) காலை... Read more »