வெளிநாட்டில் இருந்து வந்த கணவனால் மனைவிக்கு நிகழ்ந்த சோகம்!

வெல்லவயில் நபரொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெல்லவ, மரலுவாவ பிரதேசத்தில் நேற்று (02) காலை இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருநாகல் மரலுவாவ பிரதேசத்தில் வசித்து வந்த 35 வயதுடைய... Read more »

பன்னாலையில் குருபூசையும் சொற்பொழிவும்

பன்னாலையில் குருபூசையும்  சொற்பொழிவும் இடம்பெறவுள்ளது. சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிகாமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் வாராந்த பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 26 ( கலிக்கம்ப நாயனார் )... Read more »
Ad Widget

நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல்! முற்றாக முடங்கிய நீதிமன்றங்கள்!! ஓரணியில் திரண்ட சட்டத்தரணிகள்!!!

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள நீதிமன்றங்களின் செயற்பாடுகள் இன்றைய தினம் (03-10-2023) முற்றாக முடக்கின. யாழ்ப்பாணம் நீதிமன்ற செயற்பாடுகளும் முற்றாக முடக்கம் இதேவேளை, நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட  உயிர் அச்சுறுத்தல் – அழுத்தம் காரணமாக அவர்... Read more »

யாழில் பிரபல கல்லூரி கட்டட நிர்மாண ஒப்பந்தம் இடையில் முறிக்கப்பட்டது ஏன்?

S.R.Karan தற்பொழுது யாழ்.இந்து மகளிர் கல்லூரியில் கட்டப்பட்டுவரும் ஒரு நிர்மாண வேலை மிகவும் துரிதமான வேகத்தில் நடைபெற்று வருவதாகப் பரவலாகப் பேசப்பட்டுவரும் வேளையில் இவ்வொப்பந்தமானது திடீரென முடிவுறுத்தப்பட்டதாக அறிய நேரிட்டுள்ளது. இக்கட்டடத்தை தங்கள் நிறுவனம் நிர்மாணித்து வந்ததாக அறிந்து அதன் காரணத்தை அறிய உங்களை... Read more »

மனித சங்கிலி போராட்டத்தில் அனைத்து தமிழ் மக்களும் பங்கேற்க வேண்டும்! சி. வி. கே. சிவஞானம் அழைப்பு

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்த் தேசிய கட்சிகளினால் நாளையதினம் மேற்கொள்ளப்படவுள்ள மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் வெற்றி அளிப்பதற்கு தமிழ் மக்கள் தங்கள் பூரணமான ஆதரவை வழங்க வேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர்... Read more »

மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு கோரி யாழில் துண்டுப்பிரசுரம்

தமிழ்த் தேசியக்கட்சிகள் ஒன்றிணைந்து நாளை எற்பாடு செய்துள்ள பேரினவாத அடக்குமுறைக்கு ஏதிரான மனிதச்சங்கிலிப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நடவடிக்கை இன்று யாழ். சுன்னாகம் மத்திய பேருந்து நிலையம், சந்தைப்பகுதிகளில் ஆரம்பமானது. இதனை யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் (புளொட்) தர்மலிங்கம்... Read more »

திருமலை இலுப்பைக்குள விகாரை அமைப்பு அரச சர்வாதிகாரம்! சபா குகதாஸ் 

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் தமிழர்கள் முழுமையாக வாழும் இடத்தில் மக்களின் எதிர்ப்பின் மத்தியில் அமைக்கப்படும் விகாரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன விரோத செயற்பாட்டின் தொடர்ச்சியாக அரச இயந்திரத்தால் முன்னெடுக்கப்படுகின்றது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம்... Read more »

வைத்தியசாலைக்கு அருகில் தீப்பிடித்த முச்சக்கரவண்டி

கம்பளை நகரின் ஊடாகச் சென்ற முச்சக்கரவண்டி வைத்தியசாலைக்கு அருகில் திடீரென தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கணவன், மனைவி மற்றும் பிள்ளைகள் இந்த முச்சக்கரவண்டியில் கம்பளை மில்லகஹமுல பிரதேசத்தில் இருந்து கம்பளைக்கு பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து... Read more »

ரயில்வே திணைக்களத்திற்கு 245.45 பில்லியன் ரூபா நட்டம்

இலங்கை புகையிரத திணைக்களம் கடந்த 8 வருடங்களில் 297.64 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ள போதிலும் 52.19 பில்லியன் ரூபா வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி 2015ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை இலங்கை ரயில்வே திணைக்களத்திற்கு 245.45 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக... Read more »

இவ் வருடத்தில் மாத்திரம் 105 சிறுவர்கள் தொழுநோயால் பாதிப்பு!

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 105 சிறுவர்கள் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர இதனை தெரிவித்துள்ளார். தொழுநோயின் தாக்கத்துக்கு உள்ளான சிறார்கள் 14 வயதுக்குட்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலை நாட்டின்... Read more »