மனித சங்கிலி போராட்டத்தில் அனைத்து தமிழ் மக்களும் பங்கேற்க வேண்டும்! சி. வி. கே. சிவஞானம் அழைப்பு

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்த் தேசிய கட்சிகளினால் நாளையதினம் மேற்கொள்ளப்படவுள்ள மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் வெற்றி அளிப்பதற்கு தமிழ் மக்கள் தங்கள் பூரணமான ஆதரவை வழங்க வேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

மருதனார்மடம் சந்தியில் நாளை காலை 9 மணிக்கு ஆரம்பம் ஆகும் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்  யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி முட்டாஸ் கடை சந்தியில் காலை 10 மணியளவில் நிறைவடையவுள்ளது.

எனவே, அனைத்து தமிழ் மக்களும் கட்சி பேதங்களைக் கடந்து முழுமையான எதிர்ப்பினை காட்டும் முகமாக குறித்த மனித சங்கிலி ஆர்ப்பாட்டடத்தில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.

பொதுமக்கள்,பல்கலைக்கழக மாணவர்கள்,வர்த்தகர்கள்,சிவில் சமூகப் பிரதிநிதிகள் ,அரசியல்வாதிகள்,சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்ளுமாறு கேட்டுக்கொள்வதோடு அனைவரும் ஒன்றிணைத்து எமது எதிர்ப்பினை காட்டுவதன் மூலமே நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் நீதிபதிகளின் பாதுகாப்பினையும் உறுதி செய்ய முடியும்.

எனவே, அனைவரும் அணிதிரண்டு எமது கண்டனத்தை இலங்கை அரசுக்கும்,சர்வதேச சமூகத்துக்கும் காட்டுவோம் என்று சி. வி. கே. சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: S.R.KARAN