நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல்! முற்றாக முடங்கிய நீதிமன்றங்கள்!! ஓரணியில் திரண்ட சட்டத்தரணிகள்!!!

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள நீதிமன்றங்களின் செயற்பாடுகள் இன்றைய தினம் (03-10-2023) முற்றாக முடக்கின.

யாழ்ப்பாணம் நீதிமன்ற செயற்பாடுகளும் முற்றாக முடக்கம்

இதேவேளை, நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட  உயிர் அச்சுறுத்தல் – அழுத்தம் காரணமாக அவர் தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியமைக்கு காரண கர்த்தாவாக இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கக் கோரி நாளையும் யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

முல்லைத்தீவில் இன்று  சட்டத்தரணிகள் போராட்டம்

அத்தோடு, தமிழ்த் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை காலை யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தியிலிருந்து யாழ். நகர்ப்பகுதி வரை மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு கோரி யாழில் இன்று துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு கோரி யாழில் துண்டுப்பிரசுரம்

மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு கோரி யாழில் துண்டுப்பிரசுரம்

மனித சங்கிலி போராட்டத்தில் அனைத்து தமிழ் மக்களும் பங்கேற்க வேண்டும்! சி. வி. கே. சிவஞானம் அழைப்பு

மனித சங்கிலி போராட்டத்தில் அனைத்து தமிழ் மக்களும் பங்கேற்க வேண்டும்! சி. வி. கே. சிவஞானம் அழைப்பு

Recommended For You

About the Author: S.R.KARAN