அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து நீக்கப்படும் STF?

அதிவேக நெடுஞ்சாலைகளில் கடமையாற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர்களை மீளப்பெறுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால், நெடுஞ்சாலையை பயன்படுத்துவோரின் வாழ்க்கை பாதுகாப்பற்றதாகிவிடும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நாட்டில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டு... Read more »

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி குறைக்கப்படும் மின் கட்டணம்!

ஜனவரி, பெப்ரவரி மாதங்களுக்குள் மின் கட்டணம் குறையக் கூடும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹாவின் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஏற்பட்டிருந்த சிக்கல் தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஒரு... Read more »
Ad Widget

இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்த பிரபல நாடு!

கொழும்பு மற்றும் கஜகஸ்தானுக்கும் இடையிலான விமான சேவையை ஏர் அஸ்தானா விமான சேவை நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இருநாடுகளுக்குமிடையில் வாரந்தோறும் நான்கு நேரடி விமான சேவைகள் இடம்பெறும் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த விமானம் நேற்று பண்டாரநாயக்க சர்வதேச... Read more »

7 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்க்கப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்

கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விக்டோரியா பாலத்திலிருந்து களனி ஆற்றில் வீழ்ந்து உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்டின் சடலம் தெஹிவளை ஓபன் பிளேஸ் கடற்கரையில் 7 நாட்களுக்குப் பின்னர் நேற்று (2023.12.06) கண்டெடுக்கப்பட்டதாக தெஹிவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் பொரலஸ்கமுவ, திவுல்பிட்டியவில் வசிக்கும் பொலிஸ்... Read more »

பொதுமக்களிடம் தகவல் கோரும் பொலிஸார்

கற்பிட்டி – நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவக்கடுவ, கொலனி பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தேடப்படும் இரு சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். நாவக்காடு – கொலனி பகுதியில் உள்ள குறித்த... Read more »

துப்பாக்கியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த நபர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரை, இன்று (07) அதிகாலை பொலிஸார் கைது செய்தனர். துருக்கி செல்வதற்காக வந்த குறித்த நபரின் பயணப் பொதியில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மறைத்து வைக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டமையை அடுத்து, அந்நபரை விமான நிலைய பொலிஸார் கைது செய்தனர்.... Read more »

டிஜிட்டல் பொருளாதாரம்: இலங்கை பெண்களுக்கு அதிகாரமளிக்கும் புதுமைப்பெண் 2.0 ஆரம்பம்

இலங்கையிலுள்ள முழு பெண் சமூகத்தையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் வலுவூட்டி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி தேசிய பொருளாதாரத்தில் முன்னணி பங்கேற்பாளர்களாக மாற்றும் நோக்கில் சுஹுருலிய அல்லது புதுமைப்பெண் 2.0 உத்தியின் அறிமுகம் அண்மையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இல்லத்தரசி... Read more »

தங்கம் கலந்த மண் ஏற்றுமதி குறித்து தீவிர விசாரணை!

நாட்டில் இருந்து தங்கம் கலந்த மண் கொள்கலன்கள் சட்டவிரோதமான முறையில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் பல தடவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதன்மூலம் தங்கத்தைப் பெறுவதைத் தவிர, வேறு ஏதும் நோக்கங்கள் உள்ளனவா என தீவிர ஆய்வுகளும் விசாரணைகளும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.... Read more »

ராஜபக்சக்களை பாதுகாக்க மாட்டேன்: ரணில் பதிலடி

“விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்யும் நோக்கம் எனக்கு இல்லை. அதேவேளை, ராஜபக்சக்களை பாதுகாக்க வேண்டிய தேவையும் எனக்கு இல்லை.” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாவீரர் தின நிகழ்வு தொடர்பிலும், நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து ராஜபக்ச தரப்புக்கு எதிராக உயர் நீதிமன்றம்... Read more »

ஜனாதிபதி ரணிலின் சிரேஷ்ட ஆலோசகராக வடிவேல் சுரேஷ் நியமனம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. வடிவேல் சுரேஷ் அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதால் அவரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஐக்கிய மக்கள்... Read more »