கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் ட்ரெட்வின் என்ற நிதி நிறுவனத்தை நடத்திச் சென்று வைப்பாளர்களிடம் இருந்து சுமார் 500 கோடி ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தரிது இரோஷ் வீரசேகர என்ற நபர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.... Read more »
கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரிதிபான துன்ஹிடபதன காட்டு பகுதியில் நபர் ஒருவர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுவதாக பதுளை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு... Read more »
மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வெலிசர நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. Read more »
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளார். அதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று முற்பகல் ஜனாதிபதி... Read more »
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பது தொடர்பில் எதிர்க்கட்சிகள் ஆராய்ந்துவருகின்றன. நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்கள் உள்வாங்கப்படாமல் அதனை அரசாங்கம் நிறைவேற்றியிருந்தது. இந்தச் சட்டம் உயர்நீதிமன்றத்தின் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படாமையால் நிறைவேற்றப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணானது எனக் குற்றம்... Read more »
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கடந்த 2ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய கெஹலிய கைதுசெய்யப்பட்டதுடன், அவருக்கு எதிர்வரும் 15ஆம் திகதிவரை... Read more »
பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, தனியார் வங்கியொன்றின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைப்புச் செய்த பணத்தைக் கரையான் அரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகா பொது வேட்பாளராக போட்டியிட்டிருந்தார். அதன் போது அவருக்கு ஐந்து லட்சத்து இருபத்தி... Read more »
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி தற்போதைக்கு ஓரளவு இறுதி செய்யப்பட்ட நிலையில் உள்ளது. பெரும்பாலும் இந்தக் கூட்டணி தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் நாட்களில் வௌிவரக்கூடும்... Read more »
இலங்கை மக்களுக்கு காணி உரிமையை வழங்கும் “உறுமய” தேசிய வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக காணி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டொ தெரிவித்துள்ளார். காணி உரிமை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ரங்கிரி தம்புலு சர்வதேச கிரிக்கெட்... Read more »
நவகமுவ பிரதேசத்தில் உள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவருக்கு பாதாள உலகக்கும்பல் அச்சுறுத்தல் விடுத்துள்ளதையடுத்து அவரின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறித்த வர்த்தகரின் வீட்டிற்கு முன்னால் பாதாள உலகக்கும்பல் குற்றவாளி ஒருவர் தொலைபேசி இலக்கத்துடன் மலர் வளையம் வைத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் பல... Read more »

