‘துறவியாக போகிறேன்’ வீட்டை விட்டு ஓடிய சிறுமி

களுத்துறை பகுதியில் துறவரத்துக்கு செல்வதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி குறித்த செய்தி ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சிறுமி யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 14 வயதும் 06 மாத வயதுடைய இந்த சிறுமி பேருவளை, வளதாறை,... Read more »

அடுத்த கடன் தவணை ஜூன் மாதம் கிடைக்கும்: நிதி இராஜாங்க அமைச்சர்

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணை கடன் ஜூன் மாதம் இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இன்று சனிக்கிழமை (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் கருத்துரைத்த இராஜாங்க... Read more »
Ad Widget

அமெரிக்க ஆய்வு கப்பல் இலங்கைக்குள் நுழைய அனுமதி மறுப்பு

பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றுடன் அமெரிக்க ஆய்வு கப்பல் இலங்கைக்குள் பிரவேசிப்பதை அனுமதிக்காதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கைக் கடற்பரப்பிற்குள் எந்தவொரு ஆய்வுக் கப்பலும் பிரவேசிக்க அனுமதிக்கப்போவதில்லை என்ற அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானத்தில் நிலையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடல் எல்லையை பயன்படுத்தாது, எரிபொருள், நீர் சுத்திகரிப்பு, உணவு... Read more »

வத்திக்கானிடம் பதவியை நீடிக்குமாறு கோரும் ரஞ்சித் ஆண்டகை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தனது சேவையை நீடிக்குமாறு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இருந்தாலும், அவர் கோரிய சேவை நீடிப்பு இதுவரை கிடைக்கவில்லை என கத்தோலிக்க திருச்சபை வட்டாரத்தில் அறிய முடிகிறது. உயிர்த்த... Read more »

தம்மிக்கவுக்கு அடித்த அதிஷ்டம்

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது. எதிரணி அரசியல் நடத்துகின்றோம் எனக் கூறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதாலும், அக்கட்சியில் பதவியை ஏற்றதாலும் அவரை... Read more »

வடக்கு – கிழக்கில் பதற்றம் : பிரித்தானியா கவலை

இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள நில்ப பகுதிகளில் பதற்றம் அதிகரித்து வருவதாக பிரித்தானியா அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் எட்டாம் திகதி சிவராத்திரி நாளன்று வவுனியா வெடுக்குநாரி ஆதி சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வின் போது எட்டுப் பேர் கைது செய்யப்பட்டனர். இந்த... Read more »

‘சாரதி வேலைக்குச் சென்று பன்றிதான் மேய்த்தோம்’

லிதுவேனியாவிற்கு சாரதி வேலைக்காகச் சென்ற 106 இலங்கையர்களில் இரண்டு பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர். இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தலைவருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்தே இவர்கள் இருவரும் நாடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சாரதி வேலைக்கு செல்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றிற்கு 12 இலட்ச ரூபாவை... Read more »

மத்தள விமான நிலையத்தின் நிர்வாக அதிகாரம்: இந்தியா, ரஷ்யா வசமானது

மத்தள விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியாவின் m/s shaurya aeronautics (Ptv) Ltd மற்றும் ரஷ்யாவின் airport of regoins management company நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, இந்த விமான நிலையத்தின் நிர்வாகம் முப்பது ஆண்டுகளுக்கு இந்த இரு நாடுகளின்... Read more »

ரஞ்சித் ஆண்டகை பொய் கூறுகிறார்

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் பற்றி விவாதம் அரசியல் களத்தில் உருவாகியுள்ளது. ஈஸ்டர் தாக்குதலுக்கு பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவர்களை தண்டிப்போம் என அரசியல் மேடைகளில் வாக்குறுதி அளித்தவர்கள் இன்று மௌனமாக உள்ளனர். ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பில் கொழும்பு பேராயர்... Read more »

அரச சொத்தை தவறாக பயன்படுத்திய ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய ஜே.வி.பியின் கீழ் இயங்கும் சோசலிச இளைஞர் சங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இளைஞர் சேவை மன்றத்தின் சொத்துக்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பிலேயே இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த... Read more »