எலோன் மஸ்க்கை நேரில் சந்தித்த ஜனாதிபதி ரணில்: இலங்கையில் ஸ்டார் லிங்க் வலையமைப்பு?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டெஸ்லா மற்றும் ஸ்டார் லிங்க் நிறுவனத் தலைவர் எலோன் மஸ்க்கை இன்று நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு இந்தோனேசியா பாலியில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில், ஸ்டார் லிங்க் வலையமைப்பை இலங்கையில் செயற்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும்,... Read more »

சுங்க அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் பரிசுத் தொகை

சுங்க அதிகாரிகளுக்கு மற்றும் சுங்க திணைக்களத்துக்கு தகவல்களை வழங்குபவர்களுக்கு நிதி அமைச்சரின் அனுமதி எதுவுமின்றி, அதிகாரிகளின் விருப்பத்திற்கேற்ப 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2023ஆம் ஆண்டு வரையில் சுமார் 2422 கோடிக்கும் அதிகமாக பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. மேலும்,... Read more »
Ad Widget

தரமற்ற மருந்து விநியோகம்- தேசியக் கணக்காய்வு அறிக்கை தகவல்

மருந்துகளின் தரத்தை குறைந்தபட்ச வழியில் பரிசீலித்து அல்லது பரிசீலிக்காது இந்நாட்டுக்கு வரவழைத்து நோயாளர்களை அபாய நிலைக்குத் தள்ளிய தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தில் அப்போது இருந்த தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அவற்றை அனுமதித்த நிர்வாகக்குழு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு... Read more »

மின் துண்டிப்பால் சுமார் இரண்டு இலட்சம் பேர் இருளில்

இலங்கைத்தீவில் சுமார் இரண்டு இலட்சம் பாவனையாளர்களின் மின்சார இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் நிலவும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக மின்சார இணைப்பை இன்னும் அவர்கள் மீளப் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அண்மைய காலப்பகுதியில் சுமார் ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 8 பேரின்... Read more »

மாகாண சபை, உள்ளூராட்சி சபை தேர்தல்களை நடத்தவும்: பிரதமரிடம் பரிந்துரை

பல வருடங்களாக நடத்தப்படாமல் உள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்த வேண்டுமென இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு பிரதமர் தினேஸ் குணவர்த்தனவிடம் வலியுறுத்தியுள்ளது. இத் தேர்தல் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்படாமல் இருப்பதால் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ளூராட்சி பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது எனவும் மட்டங்களில்... Read more »

மாபெரும் போராட்டத்துக்கு தயாராகும் ஜே.வி.பி

ஜேவிபியின் அரசியல் கூட்டணி எனப்படும் தேசிய மக்கள் சக்தி , அரசாங்கத்தின் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக பாரிய போராட்டத்தில் ஈடுபட தயாராகி வருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும உள்ளிட்ட கட்சியின் சட்டத்தரணிகள் குழுவொன்றுக்கு இது தொடர்பிலான வேலைத்திட்டம்... Read more »

வடக்கு கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்று அனுஷ்டிப்பு

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர் 15 ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவ ரீதியாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதன்படி, இன்று போரின் இறுதிநாளாக கருதப்படுகின்றது. 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி போரின் முடிவில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கரையோரப் பகுதியில் பெருமளவிலான தமிழ் மக்கள்... Read more »

மிருசுவில் படுகொலை குற்றவாளிக்கு பொது மன்னிப்பு: கோட்டாபய ராஜபக்சவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் எட்டுப் பேர் கொல்லப்பட்ட வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் , சமர்ப்பணங்களை முன்வைக்க கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பாணை... Read more »

பிரதமர் – தேர்தல்கள் ஆணைக்குழு இடையில் சந்திப்பு

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போதுள்ள சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பிரதமர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேவையான... Read more »

கொழும்பு வெள்ளவத்தையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: சிங்கள் தமிழ் மக்கள் பங்கேற்பு

இலங்கைத்தீவின் தலைநகரான கொழும்பு வெள்ளவத்தையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் நடைபெற்றது. அதேவேளை, இந்த நிகழ்வு நடைபெற்ற இடத்தில் மற்றுமொரு குழு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டது. நிகழ்வு நடைபெற்றபோது பொலிஸாரின் பாதுகாப்புடன் எதிர்ப்பு வெளியிட்ட குழுவினர்... Read more »