தமிழரசு கட்சியின் நிர்வாகத் தெரிவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு: மே 19

வவுனியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாவட்டக் கிளைக் காரியாலயத்தில் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 19ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு குறித்த கூட்டம் நடைபெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியின் புதிய நிர்வாகத்... Read more »

வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற அமைச்சர்கள் தொடர்பில் வெளியான தகவல்: தமிழ் உறுப்பினர்கள் பலர்

மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் குடியுரிமை பெற்ற அமைச்சர்கள் சுமார் 10 பேர் மற்றும் அரச சேவையில் உயர்நிலை அதிகாரிகள் சுமார் 200 பேர் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் பிரதான சிங்கள நாளிதழான ‘லங்காதீப‘ செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி,... Read more »
Ad Widget

கெஹெலிய மீது கொலை வழக்கு? விசாரணைகளில் குற்றப்புலனாய்வு

தரம் குறைந்த மருந்துகளை அப்பாவி நோயாளர்களுக்கு வழங்கி அவர்களின் உயிரை ஆபத்தான நிலைக்குத் தள்ளிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீது கொலை குற்றச்சாட்டில் வழக்குத் தொடரவுள்ளதாக தெரியவந்துள்ளது. கெஹெலிய உள்ளிட்ட... Read more »

கையெழுத்து வேட்டையில் பசில் ராஜபக்ச

தேர்தல்களுக்கான நாட்கள் குறிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கைத்தீவின் அரசியல் அரங்கில் வெவ்வேறான அரசியல் நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை வெகு விரைவில் அறிவிப்பதாக பசில் ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், விரைவில் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற... Read more »

தனியார்மயமாக்கலை ஒத்திவைக்குமாறு வலியுறுத்தும் மஹிந்த

அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் செயற்பாடுகளை ஜனாதிபதித் தேர்தல் நிறைவடையும் வரை ஒத்திவைக்குமாறு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச கோரிக்கை விடுத்துள்ளார். மஹிந்த ராஜபக்‌ச இன்று ஞாயிற்றுக்கிழமை (12) வெளியிட்ட அறிக்கையில் தேசிய சொத்துக்கள் மற்றும் அரச நிறுவனங்களை விற்கும் அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.... Read more »

சட்டவிரோத கனடா ஆசை: யாழ், வவுனியா, மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் விமான நிலையத்தில் கைது

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்குச் செல்ல முயன்ற இருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும், போலி கடவுச்சீட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தைச்... Read more »

ஈழத்தமிழர்களுக்கான அங்கீகாரத்தை வழங்கி வரும் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி

ஈழத்தமிழர்களில் பாடும் திறன் கொண்ட அநேகர்களுக்கான அங்கீகாரம் தென்னிந்தியாவில் அதிகளவில் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும் தென்னிந்தியாவில் இடம்பெறும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அந்த அங்கீகாரம் கிடைக்கப்பெற்றாலும் தமிழ் சினிமாவில் அதிகமாக கிடைப்பதில்லை. தென்னிந்தியாவில் புகழ்பெற்ற Rap இசை பாடகராகவும், இசையமைப்பாளராகவும் மற்றும் நடிகராகவும் வலம்... Read more »

போலி கடவுச்சீட்டினுடாக கனடா செல்ல முயன்றோர் கைது

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்கு செல்ல முயன்ற இலங்கையர்கள் இருவரும் அவர்களுக்கு உதவி புரிந்த நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர்கள் எமிரேட்ஸ் விமானச் சேவையின் ஊடாக கனடா செல்லவிருந்த நிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகரிகளால்... Read more »

தலைவர் பதவியை துறந்த மைத்திரி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்குழு கூட்டத்தில் அறிவித்துள்ளார். கோட்டையில் இடம்பெற்று வரும் மைத்திரிபால சிறிசேன தரப்பினரின் செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவராக அமைச்சர் விஜேதாச ராஜபக்ச ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.... Read more »

நூற்றுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டை விட்டு தப்பியோட்டம்

யுக்திய மற்றும் அதனுடன் தெடர்புபட்ட போதைப்பொருள் ஒழிப்பு திட்டங்களால் பல வருடங்களாக போதைப்பொருள் கடத்தலில் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த நூற்றுக்கும் அதிகமான பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் வியாபாரங்களிலிருந்து நீங்கி நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக புலனாய்வு பிரிவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. மேல் மாகாணம் மற்றும்... Read more »