ஐக்கிய மக்கள் சக்தி இராஜதந்திர பணி

மியன்மார் பயங்கரவாதம் மற்றும் ரஷ்ய போரில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இராஜதந்திர பணியை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் வழிகாட்டலின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று மியன்மார் மற்றும் ரஷ்யாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மியன்மார் மற்றும் ரஷ்யாவுக்கு செல்லும் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜே.சி.அலவத்துவல, சுஜித் சஞ்சய் பெரேரா, கலாநிதி காவிந்த ஜயவர்தன, சட்டத்தரணி வசந்த யாப்பா பண்டார ஆகியோர் இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகிறது.

இதன்படி, மகாநாயக்க தேரர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கையொப்பமிட்ட மகஜர் ஒன்றையும் இந்தக் குழுவினர் எடுத்துச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin