ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி- அநுரவிடம் நாட்டை ஒப்படைக்கின்றேன்: ரணில்

தான் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தற்போது நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் படி, புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.... Read more »

“இது எம்மனைவரதும் வெற்றியாகும்“: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

பல நூற்றாண்டு காலமாக நாங்கள் கண்ட கனவே இறுதியில் நனவாகிக்கொண்டிருக்கிறது. இந்த கனவை நனவாக்குவதற்காக பல சிரமங்களுக்கு மத்தியில் இலட்சக்கணக்கான நீங்கள் அனைவரும் கடந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சி பலனளித்துள்ளது. அதற்காக என்னால்உங்களுக்கு நன்றிகூற முடியாது. அதற்கான காரணம் அது என்னுடையதல்ல, எமது கூட்டுமுயற்சியின்... Read more »
Ad Widget

பதவி விலகிய தென் மாகாண ஆளுநர்

தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இன்று தனது பதவி விலகினார். புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான சாத்தியக்கூறுககள் காரணமாக தான் பதவி விலகியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் Read more »

இலங்கை வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல்: பஃவ்ரல்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், இலங்கை வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தலாக இடம்பிடிக்குமென சுதந்திரமானதும் மற்றும் நியாயமானதுமான தேர்தலுக்கான (PAFFREL) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். தேர்தலின்போது அரச... Read more »

அனுரவிற்கு பலரும் வாழ்த்து: தோல்வியையும் ஒப்புக்கொண்டனர்

தபால்மூல வாக்குகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க முன்னிலை வகிக்கின்றார். இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தோல்வியை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஒப்புக்கொண்டுள்ளதோடு... Read more »

ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார வெற்றி: பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் தகவல்

ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர் மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திசாநாயக்க வெற்றிபெற்றுள்ளதாகவும், அரசியலில் நாமல்... Read more »

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது

நாடு முழுவதும் அமுலுக்கு வரும் வகையில் நேற்று இரவு 10.00 மணி முதல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமுல்படுத்திய ஊரடங்கு சட்டம் இன்று (22) காலை 06.00 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த ஊரடங்கு சட்டம்... Read more »

அநுர முன்னிலை: நாட்டை வழிநடத்த அமைச்சர் அலி சப்ரி வாழ்த்து

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பதிவில் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளதாவது, “நீண்ட மற்றும் கடினமான பிரச்சாரத்திற்குப் பிறகு,... Read more »

ரணில் நாமலின் ஆதரவாளர் நாட்டில் இருந்து வெளியேறினர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் வெளிநாடு செல்லவுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, இன்று (22) அதிகாலை 12.50 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹொங்கொங் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தல் காலம்... Read more »

வன்னி தபால் மூல வாக்கு முடிவு!

நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள்வெளியாகியுள்ளன. இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4899 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார். சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 4257வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட... Read more »