ஆட்சி மாற்றத்தின் பின்னர் அண்மையில் அரச வாகனங்களை திருப்பி அனுப்பியவர்களின் பட்டியலில் தனது பெயரும் உள்ளடங்கியமை தவறான தகவல் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர தெரிவித்துள்ளார். புதிய நிர்வாகத்தினால் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட பட்டியலின்படி, பத்ம உதயசாந்த குணசேகர டொயோட்டா ஹிலக்ஸ்... Read more »
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்துவதற்குத் தகுதியற்றவர்கள் எனவும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் சாதாரண கடவுச்சீட்டைப் பெற வேண்டும் எனவும் நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் இராஜதந்திர கடவுச்சீட்டுகள்,... Read more »
இலங்கை வரும் உக்ரைன், நைஜீரிய, பல்கேரிய மற்றும் இந்திய பிரஜைகள் இணையத்தின் ஊடாக அதிநவீனமான முறையில் பாரியளவிலான பண மோசடிகள் இடம்பெறுவதாகவும் ஒட்டுமொத்த வங்கி அமைப்புக்கும் பாரிய அச்சுறுத்தலாக இது மாறியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று (30) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வெளிநாட்டுப்... Read more »
ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றபோது தனது வங்கிக் கணக்கில் பணம் இல்லை எனவும், தற்போது காணி விற்று வாழ்ந்து வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறிய... Read more »
அதிகார மாற்றத்திற்கு பின்னர் முகநூலை இலக்கு வைத்து பரப்பப்படட பொய்கள் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட சகல மதுபான உரிமை பத்திரங்களும் இரத்து செய்யப்பட்டதாக சொல்லப்படும் தகவல்கள் தவறானது இன்றுவரை எந்த மதுபான உரிமை பத்திரங்களும் இரத்து செய்யப்படவில்லை குறைந்தது 30 அரசியல் பிரமுகர்கள்... Read more »
டிசம்பர் மாதம் ஓய்வு பெறவிருந்த அமைச்சின் செயலாளர் நாளைய (30) தினம் ஓய்வு பெற தீர்மானித்துள்ளார். இது தொடர்பான ஆவணங்கள் ஓய்வூதியத் திணைக்களத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஓய்வு பெறவுள்ள நிலையில், புதிய அரசாங்கத்தினால் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டு கடந்த... Read more »
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியிடும் பங்காளிக் கட்சிகள், தேர்தலுக்கு முன்னரே கோரும் தேசியப்பட்டியல் ஒதுக்கீட்டுக்கு உத்தரவாதமளிக்காதிருக்க கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்திருப்பதாக அறியமுடிகின்றது. ஐக்கிய மக்கள் கூட்டணியில் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில... Read more »
புதிய அமைச்சரவை முதன் முறையாக இன்று (30) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் கூடுகிறது. இதன் போது முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்பட இருப்பதோடு, அது தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும். Read more »
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கசினோ அனுமதிப்பத்திரம் சட்டவிரோதமாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுவதால் இதன் மூலம் அரசாங்கத்துக்கு பாரிய நிதி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை முன்வைத்து உயர. நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று இன்று (30) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.... Read more »
தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கிகளை தாமதமின்றி பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தத் துப்பாக்கிகளை பெற்றுக் கொண்ட முன்னாள் உறுப்பினர்களை ஒப்படைக்குமாறு பாராளுமன்ற அதிகாரிகள் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் உள்ள... Read more »

