அரசியலமைப்பு பேரவை உறுப்பினர் நியமனம்

அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். இதற்கமைய ஆளும்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் அபு பக்கர் ஆதம்பாவா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சியை பிரபதிநிதித்துவப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவரது பிரதிநிதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித்.பி.பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன்... Read more »

மின் கட்டணத்தில் மாற்றம் இல்லை

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை, பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. இதன்படி, மின்சார சபை முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதுடன், தற்போதுள்ள மின் கட்டணத்தை திருத்தம் செய்யாமல் அதே முறையில் மாற்றமின்றி பேணுவதற்கு இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது. Read more »
Ad Widget

இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு பாராளுமன்றில் நிறைவேற்றம்

2025 வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு குறித்த தீர்மானம் பாராளுமன்றத்தில் இன்று (06) வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது. 2025 வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் பணிகள் மற்றும் கடன் சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு... Read more »

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றத்திற்கான குழு தலைவரானார் ஜீவன் தொண்டமான்

பொதுத் தேர்தலில் சிலிண்டர் மற்றும் யானை சின்னத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் குழுவின் தலைவராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி நுவரெலியா மாவட்டத்தில் நாடாளுமன்றத்திற்கு தெரிவான ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஆவார். 46,438 அதிகூடிய... Read more »

சிவப்பு சீனி மீதான பெறுமதி சேர் வரியை நீக்க அரசாங்கம் தீர்மானம்

சிவப்பு சீனி மீதான பெறுமதி சேர் வரியை நீக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.... Read more »

ஐ.எம்.எப். திட்டம் – மீண்டும் திருத்தியமைக்கப்படாது ; அரசாங்கம் திட்டவட்டம்

சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது ஏற்படுத்திக்கொண்டுள்ள இணக்கப்பாடுகளை மீண்டும் திருத்தியமைக்க முடியாது. அதில் காலதாமதங்களை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை சவாலுக்கு உட்படுத்த முடியாதென வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இடைக்கால கணக்கறிக்கை மீது இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றும் போதே... Read more »

14 வயது சிறுமி கொலை…கழிப்பறைக் குழியில் வீசப்பட்ட சடலம்

14 வயது சிறுமியொருவர் கொலை செய்யப்பட்டு கழிவறைக் குழியில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கம்பஹா, அகரவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கடந்த திங்கட்கிழமை (02) முதல் தனது 14 வயது மகளை காணவில்லை என நேற்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். நேற்றிரவு... Read more »

தேங்காய் விலை 230 ரூபாவாக அதிகரிப்பு

தேங்காய் விலையை 220 முதல் 230 ரூபா வரையில் வர்த்தகர்கள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். கொழும்பு, கண்டி, இரத்தினபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள வர்த்தகர்கள் தேங்காய்களை தங்களுடைய விலைக்கே விற்பனை செய்வதாகவும் நுகர்வோர் கூறுகின்றனர். தேங்காய் விலை உயர்வால், புத்தாண்டுக்கு பால்சோறு... Read more »

ஜீவனை வென்ற சிறீதரன்!

அரசமைப்புக் கவுன்ஸிலுக்கு எதிர்க்கட்சித் தரப்பின் பிரதிநிதியைத் தெரிவு செய்வதற்காக பிரதான எதிர்க்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர்... Read more »

சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்தத் தடை

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை  ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹசங்க விஜேமுனி தெரிவித்துள்ளார். அதற்கான வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக... Read more »