யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2025

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2025 வடபகுதி மக்களினால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வர்த்தக திருவிழாவான யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி 2025 , இம் மாதம் 24, 25 மற்றும் 26 திகதிகளில் முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது. பொருளாதார முன்னேற்றத்திற்கான வடக்கின் நுழைவாயில் எனும் தொனிப்பொருளுடன்    2002 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியானது இம்முறை 15 வது ஆண்டாக மிகச்சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் Lanka Exhibition & Conference Services (Pvt) Ltd. நிறுவனம் மற்றும் யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றம் (CCIY)  இணைந்து  யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியினை நடாத்தி வருகின்றது. இந்த ஆண்டு 45,000  தொடக்கம் 60,000  வரையான பார்வையாளர்கள் வருகைதருவார்கள் என எதிர்பார்க்கப்படும் யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பல்வேறுபட்ட வழங்குனர்களால் 350 க்கு மேற்பட்ட காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாயம், தொழில்நுட்பம் ,  விருந்தோம்பல், கல்வி, உணவு , நவநாகரிகம் மற்றும் இதர தொழிற்துறைகள் என பல்வேறுபட்ட வர்த்தக நிறுவனங்களின் பொருட்கள் மற்றும் சேவைகள் காட்சிப்படுத்தி விற்பனை செய்யப்பட உள்ளன. கைத்தொழில்துறை வளர்ச்சியில் சந்தைவாய்ப்பு தொடர்பில் வடக்கில் இருந்த பாரிய ஒரு இடைவெளியானது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் மூலமாக நிவர்த்தி செய்யப்பட்டுள்தை மறுத்துவிட முடியாது . அதுமட்டுமல்லாது வடக்கின் தொழில் முயற்சிகள் அடுத்தகட்டத்திற்கு நகர்த்துவதற்கான வழிமுறைகளை உருவாக்கியுள்ளதுடன் எமது உற்பத்திகள் இன்று வடக்கில் மாத்திரமன்றி தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளையும் ஆக்கிரமித்து உள்ளது என்றால் இவ்வாய்ப்புகளை உருவாக்கலுக்கான அடித்தளம் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் மூலம் ஏற்படுத்தப்பட்டது என்பது மறுக்கமுடியாதது. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்தி மற்றும் சேவைகளை  அறிமுகப்படுத்தவும், வடக்கிலுள்ள சமூகங்கள் நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள பல்வேறு வகையான உற்பத்திகள் மற்றும் சேவைகளை அறிந்து கொள்வதற்கும் , தெற்கு மற்றும் சர்வதேச தொழில் முயற்சியாளர்கள் வடக்கிலுள்ள சக தொழில் முயற்சியாளர்களைச் சந்தித்து வியாபார பொருளாதார தொழில்நுட்ப ரீதியில் தொடர்புகளை வளர்க்கவும் எமது தொழில் முயற்சியாளர்கள் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் அவற்றின் வினைத்திறனான செயல்பாடுகளை அறிந்து பயனடையும்  ஒரு களமாகவே யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி அமைந்துள்ளது.... Read more »

அரசாங்கத்தின் திட்டத்தை பின்பற்றப்படாவிட்டால், அரிசி ஆலை இராணுவத்தால் கையகப்படுத்தப்படும்-  ஜனாதிபதி!

அரசாங்கத்தின் திட்டத்தின்படி இயங்காத அரிசி ஆலைகளுக்கு இராணுவம் அனுப்பப்படும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நேற்று (21) இரவு சிரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சட்டன சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். பெரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் அரசாங்கத்தின்... Read more »
Ad Widget

சிரச ‘சடன’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனாதிபதி தெரித்த விடயங்கள்

கொழும்பு, கண்டி ஜனாதிபதி மாளிகைகளை தவிர்ந்து ஏனைய ஜனாதிபதி மாளிகைகள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லங்களை பொருத்தமான வேலை திட்டங்களுக்கு பயன்படுத்த அரசாங்கம் தீர்மானம். 🔴அடையாளம் காணப்பட்ட சிறைச்சாலைகளின் வெளிப்புற பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உறுப்பினர்களை ஈடுபடுத்தவும், அவர்களை 03 மாதங்களுக்கு ஒரு முறை... Read more »

6 கோடி 63 இலட்சம் மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது!

6 கோடி 63 இலட்சம் மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருளை வெளிநாட்டிலுந்து கடத்தி வந்து விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு செல்ல முயன்ற இரண்டு பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more »

Dr அர்ச்சுனா (எம்பி) வுக்கு கல்குடாவிலிருந்து எச்சரிக்கை

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் Dr அர்ச்சுனா ராமநாதன் தம்மை இழிபடுத்தும் வகையில் பேசியதாகவும் அதற்கு சட்ட நடவடிகை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தினால் இன்று மாலை (21) ஊடக சந்திப்பொன்று வாழைச்சேனையில் இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தின்... Read more »

ஒற்றையாட்சி பாராளுமன்றத்தில் சிறிதரன் எம்பி தனக்காக நீதி கேட்கிறார்.

அன்ரன் பாரசிங்கம் எவ்வாறு அண்ணனுக்கு தேவையோ சுமந்திரன் எங்களுக்கு தேவை. சொன்னவர் வேறு யாரும் அல்ல சிறிதரன் எம்பி இது பழைய கதை தமிழரசு கட்சி சுமந்திரன் பக்கம் என்பது சிறிதரன் பாராளுமன்றத்தில் தனக்கு நீதி கேட்டதில் இருந்து தெளிவாகிறது. சுமந்திரன் தொடர்பில் அரசியல்... Read more »

இலஞ்சம் பெற்ற குடிவரவு,குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது

விசா இல்லாமல் தங்கியிருந்த ஒருவரை விடுவிப்பதற்காக 500,000 ரூபா இலஞ்சம் பெற்ற குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரி ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். விசா இல்லாமல் தங்கியிருந்த சந்தேக நபரை வெலிசரை குடிவரவு மற்றும் குடியகல்வு தடுப்பு மையத்திலிருந்து விடுவிப்பதற்குத்... Read more »

பின்னணியில் சுமந்திரனின் சூழ்ச்சி ; விசாரணை நடத்துமாறு சிறீதரன் எம்.பி கோரிக்கை

கனடாவில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்புடன் கலந்துரையாடவே நான் சென்னை செல்ல இருந்ததாகவும் அதனாலேயே, விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய பேட்டி தொடர்பில் விசாரணை நடத்துமாறு, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்... Read more »

மின் கட்டணம் 20 வீதம் குறைப்பு- வர்த்தகர்கள், மின் பாவனையாளர் அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிப்பு

மின்சாரக் கட்டணத்தை 20 வீதமாக அரசாங்கம் குறைத்தமைக்காக கொழும்பு வர்த்தகர்கள் சார்பாகவும் கொழும்பு வாழ் மின் பாவனையாளர்கள் சார்பாகவும் அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவிப்பதாக, வர்த்தக சங்கத் தலைவர் தில்சான் நாவலகே நேற்று தெரிவித்தார். கொழும்பு ‘எக்கமுத்து வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர், அமைப்பாளர் இணைந்து நடத்திய... Read more »

பத்து சீமெந்து மூட்டைகளை இலஞ்சமாக பெற்ற பாடசாலை அதிபருக்கு சிறை

மாணவரை இணைத்துக் கொள்வதற்காக பத்து சீமெந்து மூட்டைகளை இலஞ்சமாக பெற்ற பாடசாலை அதிபருக்கு சிறை முதலாம் தரத்துக்கு மாணவரை இணைத்துக் கொள்வதற்காக பத்து சீமெந்து மூட்டைகளுக்கான தொகையினை இலஞ்சமாக பெற்ற சம்பவம் தொடர்பில் கைதான பாடசாலை ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால்... Read more »